கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை: கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சூலூரில் வசித்து வரும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ரங்கசாமி. கடந்த சனிக்கிழமை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு ரங்கசாமி தனது குடும்பத்துடன் சென்றார். மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை, டிவி மற்றும் மைக்ரோ ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
அதே போல், கடந்த ஞாயிற்றுக் கிழமை காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து ரூ. 80,000 மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிந்தாமணிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது இரும்பு கடையின் பூட்டை உடைத்து நேற்று இரவு ரூ.2.5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சூலூரில் வசித்து வரும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ரங்கசாமி. கடந்த சனிக்கிழமை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு ரங்கசாமி தனது குடும்பத்துடன் சென்றார். மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை, டிவி மற்றும் மைக்ரோ ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
அதே போல், கடந்த ஞாயிற்றுக் கிழமை காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து ரூ. 80,000 மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிந்தாமணிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது இரும்பு கடையின் பூட்டை உடைத்து நேற்று இரவு ரூ.2.5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.