சூலூர் வட்டாரத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள் : அச்சத்தில் பொதுமக்கள்

கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: கோவை சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சூலூரில் வசித்து வரும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர் ரங்கசாமி. கடந்த சனிக்கிழமை உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு ரங்கசாமி தனது குடும்பத்துடன் சென்றார். மறுநாள் வீடு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் நகை, டிவி மற்றும் மைக்ரோ ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

அதே போல், கடந்த ஞாயிற்றுக் கிழமை காங்கேயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சம்பத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து ரூ. 80,000 மற்றும் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

இந்த இரு வேறு சம்பவங்கள் தொடர்பாக குற்றவாளிகளை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சிந்தாமணிபுதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரது இரும்பு கடையின் பூட்டை உடைத்து நேற்று இரவு ரூ.2.5 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

சூலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...