சாயப்பட்டறை ஊழியரை அடித்துக் கொன்று புதைத்த சகஊழியர்: பிரேதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

திருப்பூர் அருகே தனியார் சாயப்பட்டறை நிறுவன ஊழியர் அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே தனியார் சாயப்பட்டறை நிறுவன ஊழியர் அடித்துக் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள கே. நல்லச்சாம்பட்டியை சேர்ந்தவர் மூக்கன் மகன் கணேசன் (வயது 35). இவர், திருப்பூர் அங்கேரிபாளையம் அருகில் உள்ள வெங்கமேடு பகுதியில் இருக்கும் எஸ்.வி., டையிங் என்கிற சாயப்பட்டறையில் உள்ள கோன் வைண்டிங்கில் பணியாற்றி வந்தார். இவருடன் மதுரையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு வேலை செய்பவர்களுக்கு, சாயப்பட்டறை வளாகத்திலேயே தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால், அங்கேயே தங்கி பணியாற்றி வந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக கணேசனை காணவில்லை என போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார் மேற்படி சாயப்பட்டறையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அந்தப் பதிவுகளில், கணேசன், ஆனந்தன் இருவரும் டையிங் நிறுவன மாடிக்கு சென்றதும், ஆனந்தன் மட்டும் இறங்கி வருவதும், கணேசன் மேலே இருந்து வராததும் தெரிய வந்தது.

இதையடுத்து, புலன் விசாரணை செய்த போலீசார் கணேசன் அடித்து கொல்லப்பட்டு, சாயப்பட்டறை நிறுவனத்திலேயே உள்ள சாம்பல் கொட்டும் குப்பையில் சுமார் 3 அடி ஆழ குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிணத்தைக் கைப்பற்றிய போலீசார் ஆனந்தன் குறித்து விசாரித்தனர். 

விசாரணையில் ஆனந்தன், ஞாயிறன்று நடந்த சம்பவத்துக்கு பிறகு திங்கள்கிழமையும் வேலை பார்த்த ஆனந்தன் தலைமறைவாகி விட்டார். இதனால் ஆனந்தன் தான் கணேசனை அடித்து கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆனந்தனை தேடி வருகின்றனர். கணேசனின் பிணத்தை கைப்பற்றிய போலீசார் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...