இது ராஜஸ்தான் இல்ல., நம்ம கோயம்புத்தூர்..!: வறட்சியின் விளிம்பில் கோவை

குறிச்சி குளப்பகுதியில் சுற்றித் திரியும் ஒட்டகம் கோவை வறட்சியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பதை நினைவுபடுத்தியது.



கோவை: குறிச்சி குளப்பகுதியில் சுற்றித் திரியும் ஒட்டகம் கோவை வறட்சியின் விளிம்புக்குச் சென்று கொண்டிருப்பதை நினைவுபடுத்தியது.

கோவையில் உள்ள குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பராமரிப்பின்றி விடப்பட்ட பல்வேறு வகையான கால்நடை இனங்களைக் காண முடியும். வாழ்வாதாரத்தைத் தேடி நீர் நிலைகளுக்கு வரும் அவை பெரும்பாலும் சாலையோரங்களில் சுற்றித்திரிவது வழக்கமான ஒன்று. அவ்வாறு சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று தான். 

இந்த நிலையில், பாலைவன பிரதேசங்களில் வாழும் ஒட்டகங்கள் சில கோவை குறிச்சி குளத்தின் அருகில் சுற்றித் திரிந்தன. "எதோ ஒரு பாலைவன பிரதேசத்திற்கு அருகே சென்றுவிட்ட கொண்டிருக்கும் பீலிங்..!" கோவையில் தற்போது வீசும் அனல்காற்றும், வாட்டியெடுக்கும் வெயிலும், வறட்சியும் தற்போது இந்த ஒட்டகங்களும் கோவையை ஒரு வருங்கால பாலை வனமாகவே காண்பிக்கின்றன. 

இந்த புகைப்படத்தை எடுத்த சமூக ஆர்வலர் உமேஷ் இது குறித்து கூறியதாவது :- 

குளத்தில் நான்கு ஒட்டகங்கள் உள்ளன. இதனை வாழ்வாதாரத்திற்காக சிலர் பயன்படுத்தி வருகின்றனர். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி இது தவறு. இது போன்று சட்டவிரோதமாக விலங்குகளைப் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் நகர்ப்புறங்களில் பராமரிப்பின்றி விடப்பட்ட கால்நடைகள் உணவு உண்பதற்கு தீவனங்கள் கிடைப்பதில்லை. இதனால், அவை பசுந்தீவனங்களை தேடி குளங்கள் மற்றும் குட்டைப் பகுதிகளுக்கு செல்கின்றன. அங்குள்ள நீர் நிலைகளில் அவை நீரை அருந்துகின்றன. சில நேரங்களில் அப்பகுதியிலேயே உயிரிழந்துவிடுகின்றன. இறந்துபோன கால்நடை தண்ணீருக்குள் மிதப்பதால் அங்கு நீர் மாசுபாடு ஏற்படுகிறது. 

கால்நடைகளிடமிருந்து பிரதிபலனை எதிர்பார்க்கும் நம் மக்கள், அதனைப் பாதுகாப்பான சூழலில் வளர்க்கத் தவறுவதால் இந்த பிரச்சனைகள் எழுகின்றன. தற்போது கோவையை வளம் வரும் இந்த ஒட்டகங்கள் பாலை வனத்தை நினைவுபடுத்துகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காவிட்டால் உண்மையாகவே கோவை ராஜஸ்தான் பாலைவனமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, சூழ்நிலையை அறிந்து அனைத்து தரப்பினரும் நீர் நிலைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பது சூழலியல் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...