கோவை மக்கள் அனைவரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் - மாநகராட்சி ஆணையாளர்

கோவை மக்கள் அனைவரும் வரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை மக்கள் அனைவரும் வரும் "பயோ" பைகளை பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத பையோ பைகளை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் இன்று அறிமுகம் செய்தார்.



தொடர்ந்து அவர் பேசுகையில், "இயற்கை முறையில் மக்கும் பைகளின் பயன்பாடு நகரின் பெரும்பாலான உணவகங்களில் தொடங்கிவிட்டது. கோவையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ள பைகளை பயன்படுத்த பொதுமக்களும், வியாபாரிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் தற்போது இந்த "பயோ" பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் பொருட்கள் வாங்கும் போது இந்த பைகளை கேட்டுப் பெற வேண்டும். மேலும், இயற்கையை பாதிக்காத இந்த பையோ பைகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத நகரை உருவாக்க முடியும்." என்றார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...