உடையாம்பாளையம் தனியார் பள்ளி அருகே தீ விபத்து
கோவை: கோவை உடையாம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில், அப்பகுதியின் ஒரு இடத்தில் குடியிருப்புவாசிகள் தற்காலிக குப்பை கொட்டும் பகுதியை உருவாக்கியுள்ளனர். அதில், நாள்தோறும் அவர்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்தக் தற்காலிக குப்பை மேடு தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளால், கரும்புகை வெளியேறியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த கரும்புகையால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக அப்பள்ளிக்கு விடுமுறையை பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த தீயினை அணைக்க அப்பகுதி மக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.