மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதனையடுத்து, கோயிலுக்குள் நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் ஆளுநர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்று, கலாமின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார். அப்போது, கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்கயாருக்கு பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தினார். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்தார். பின்னர், இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதைத்தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ராமநாதபுரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணத்தையொட்டி ராமநாதபுரம், திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.