கலாம் குடும்பத்தினரை சந்தித்து நலம் விசாரித்த ஆளுநர்

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.


மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்குச் சென்று, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்றனர். இதனையடுத்து, கோயிலுக்குள் நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் ஆளுநர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் இல்லத்திற்கு குடும்பத்தினருடன் சென்று, கலாமின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம் விசாரித்தார். அப்போது, கலாமின் சகோதரர் முத்துமீரான் மரைக்கயாருக்கு பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தினார். பதிலுக்கு அவரும் பொன்னாடை அணிவித்தார். பின்னர், இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதைத்தொடர்ந்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ராமநாதபுரத்தில் ஆளுநரின் சுற்றுப்பயணத்தையொட்டி ராமநாதபுரம், திண்டுக்கல் சிவகங்கை மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...