கஞ்சா விற்பனையை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை: கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்தாத ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் , மாவட்டம் முழுவதும் காவல் துறை உதவியோடு கஞ்சா விற்கப்பட்டு வருகிறது என்று கூறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முன்ற அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர். 



இது தொடர்பாக அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், " இரண்டு முறை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் இருவரிடமும் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தோம். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மீண்டும் மாதம்பட்டி பகுதியில் காவல் துறையினரின் உதவியோடு கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இதனைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டதில் ஈடுபட்டோம். 

தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஈஸ்வரன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...