கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
திருப்பூர்: கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
பா.ஜ.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் , கம்யூனிஸ்டுகளின் துஷ்பிரச்சாரங்கள் எடுபடவில்லை. அதனால் தான் திரிபுரா நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
கம்யூனிஸ்டுகள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். இனி அவர்கள் ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். இந்தியாவின் ஈசானி மூலையான வடகிழக்கு மாநிலங்களில் குப்பைகளை சுத்தப்படுத்தியுள்ளதால் இனி பாரதத்திற்கு நல்லது. காவிரி விவகாரத்தில் தி.மு.க. தலைவர் குடும்பம் செய்த துரோகம் ஏராளம். அவர்கள் செய்த துரோகத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும். அதற்குள் காவிரி நீர் திருக்குவளையை அடையும்.
மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ராஜினாமா செய்யத் தயார் என்று கூறும் தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர்கள் 3 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது.
காவிரி விவகாரத்திற்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதை விட திமுக எம்.எல்.ஏ.க்கள் 90 பேர் ராஜினாமா செய்யட்டுமே.
சர்வதேச கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் இந்து விரோத அமைப்புகள் அன்று பெரியாரை பயன்படுத்தி பா.ஜ.க.வை அழிக்க நினைத்தனர். இன்று கமலஹாசன் உதவியை நாடியுள்ளனர்." என்றார்.

பா.ஜ.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் , கம்யூனிஸ்டுகளின் துஷ்பிரச்சாரங்கள் எடுபடவில்லை. அதனால் தான் திரிபுரா நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
கம்யூனிஸ்டுகள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். இனி அவர்கள் ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். இந்தியாவின் ஈசானி மூலையான வடகிழக்கு மாநிலங்களில் குப்பைகளை சுத்தப்படுத்தியுள்ளதால் இனி பாரதத்திற்கு நல்லது. காவிரி விவகாரத்தில் தி.மு.க. தலைவர் குடும்பம் செய்த துரோகம் ஏராளம். அவர்கள் செய்த துரோகத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும். அதற்குள் காவிரி நீர் திருக்குவளையை அடையும்.
மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ராஜினாமா செய்யத் தயார் என்று கூறும் தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர்கள் 3 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது.
காவிரி விவகாரத்திற்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதை விட திமுக எம்.எல்.ஏ.க்கள் 90 பேர் ராஜினாமா செய்யட்டுமே.
சர்வதேச கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் இந்து விரோத அமைப்புகள் அன்று பெரியாரை பயன்படுத்தி பா.ஜ.க.வை அழிக்க நினைத்தனர். இன்று கமலஹாசன் உதவியை நாடியுள்ளனர்." என்றார்.
