கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும்.- எச்.ராஜா

கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

திருப்பூர்: கம்யூனிஸ்டுகள் இனி ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

பா.ஜ.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு உரையாற்றினார். 



நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக காங்கிரஸ் , கம்யூனிஸ்டுகளின் துஷ்பிரச்சாரங்கள் எடுபடவில்லை. அதனால் தான் திரிபுரா நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

கம்யூனிஸ்டுகள் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். இனி அவர்கள் ஜெ.என்.யூ கேம்பசில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும். இந்தியாவின் ஈசானி மூலையான வடகிழக்கு மாநிலங்களில் குப்பைகளை சுத்தப்படுத்தியுள்ளதால் இனி பாரதத்திற்கு நல்லது. காவிரி விவகாரத்தில் தி.மு.க. தலைவர் குடும்பம் செய்த துரோகம் ஏராளம். அவர்கள் செய்த துரோகத்திற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும். அதற்குள் காவிரி நீர் திருக்குவளையை அடையும். 

மத்திய அரசு காவிரி விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். ராஜினாமா செய்யத் தயார் என்று கூறும் தி.மு.க.வின் ராஜ்யசபா உறுப்பினர்கள் 3 பேரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தோடு முடிவடைகிறது.

காவிரி விவகாரத்திற்காக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வதை விட திமுக எம்.எல்.ஏ.க்கள் 90 பேர் ராஜினாமா செய்யட்டுமே. 

சர்வதேச கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் இந்து விரோத அமைப்புகள் அன்று பெரியாரை பயன்படுத்தி பா.ஜ.க.வை அழிக்க நினைத்தனர். இன்று கமலஹாசன் உதவியை நாடியுள்ளனர்." என்றார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...