திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
திருப்பூர் முதலியாளையம் பகுதியில் மாநகராட்சி சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 6 ஏக்கர் நில பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால், 5 கி.மீ. தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. தீவிபத்து ஏற்பட்டதற்கு இதுவரை மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்த புகையினை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல், உடல் உபாதைகள் ஏற்பட கூடிய நிலைமை வந்ததுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர்.
தற்போது, தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள காரணத்தால் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவு நீரை கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
நேற்று இரவு சில சமூக விரோதிகளால் தீயை கொளுத்தியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.