திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

திருப்பூர் முதலியாளையம் பகுதியில் மாநகராட்சி சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 6 ஏக்கர் நில பரப்பளவில் உள்ள இந்த குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.



இதனால், 5 கி.மீ. தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது. தீவிபத்து ஏற்பட்டதற்கு இதுவரை மாநகராட்சி எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இந்த புகையினை சுவாசிப்பதால் மூச்சுத் திணறல், உடல் உபாதைகள் ஏற்பட கூடிய நிலைமை வந்ததுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாடினர். 

தற்போது, தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள காரணத்தால் மாநகராட்சியின் பாதாள சாக்கடை கழிவு நீரை கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.



நேற்று இரவு சில சமூக விரோதிகளால் தீயை கொளுத்தியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...