ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : கார்த்தி சிதம்பரத்திற்கு 5 நாள் காவல்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதான கார்த்தி சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ., கைது செய்து நீதிமன்றம் அனுமதியுடன் ஒருநாள் விசாரணைக்கு அழைத்து சென்றது. விசாரணை முடிந்ததும், கார்த்தி சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் இருதரப்பு வாதங்கள் தொடங்கியது. இந்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ஜெனரலாக துஷார் மேத்தா சிபிஐ சிறப்பு வழக்கறிஞராக ஆஜரானார். 

அப்போது, கார்த்தி சிதம்பரத்திடம் ஒருநாள் விசாரணையில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும், வழக்கு தொடர்பான அடிப்படை கேள்விக்கே அவர் பதில் அளிக்க மறுப்பதாகவும் கூறப்பட்டது. எனவே, கார்த்தி சிதம்பரத்தை மேலும் 2 வாரம் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. மேலும், கார்த்தி சிதம்பரம் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் வாதம் செய்யப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் தரப்பில் வாதாடிய அபிஷேக் சிங்வி, கார்த்தி மீது போடப்பட்டுள்ள வழக்கு வினோதமானது. கார்த்தியை கைது செய்தது ஏன் என்று சி.பி.ஐ. விளக்கம் அளிக்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு கார்த்தி ஒத்துழைப்பு அளித்தார். சம்மன் அளிக்காமல் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சி.பி.ஐ., எப்படி கூற முடியும். இந்திராணி முகர்ஜியின் வாக்கு மூலத்தை சிபிஐ வெளியிட்டது ஏன்..? என வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், கார்த்தி சிதம்பரத்தை மார்ச் 6-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சி.பி.ஐ.,க்கு அனுமதி வழங்கியது. 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், 5 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...