மூன்றாண்டுகளில் 6,063 குழந்தைகள் மீட்பு - ரயில்வே கண்காணிப்பாளர்

தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

உதயம் தன்னார்வலர்கள் மற்றும் ரயில்வே காவல் துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆட்டோ ஒட்டுநர்கள், கால் டாக்சி ஒட்டுநர்கள், லோடு மேன்கள் மற்றும் போட்டர்ஸ் ஆகியோருக்கு அடையாள அட்டைகள் இன்று கோவையில் வழங்கப்பட்டன. இந்த அடையாள அட்டைகளை 266 பேருக்கு ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் வழங்கினார்.

ரயில் நிலையத்தில் குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலோ அடையாள அட்டை உள்ளவர்கள் உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். இதனால் குழந்தைகள் கடத்தப்படுவது, பெருமளவு தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஜோர்ஜி ஜோர்ஜ் பேசுகையில், "உலகில் குழந்தைகள் அதிகம் உள்ள நாடு இந்தியா. 18 வயதிற்கும் கீழ் உள்ள 45 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் உள்ளனர். குழந்தைகள் அனைவருக்கும் நல்ல கல்வி மற்றும் பாதுகாப்பு நாம் கொடுக்க வேண்டும். அது நம் கடமை. குழந்தைகள் தொலைந்து போனால் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையங்களுக்குத் தான் முதலில் அவர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் குழந்தைகளை பாதுகாக்க இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



குழந்தைகள் தனியாக வரும் போது சமூக விரோதிகளால் அவர்கள் கடத்தப்படும் வாய்ப்பு அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக ரயில் நிலையங்களில் 6 ஆயிரத்து 663 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 

கோவை ரயில் நிலையத்தை நூறு சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பு நிலையமாக மாற்ற முடியும். அதற்காக அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்." என்றார்.



இந்த நிகழ்ச்சியில் ரயில் நிலைய இயக்குநர் டி.சதிஷ் சரவணன், நிலைய மேலாளர் எல்.சின்ராசு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...