மூன்றாண்டுகளில் 6,063 குழந்தைகள் மீட்பு - ரயில்வே கண்காணிப்பாளர்

தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 63 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

உதயம் தன்னார்வலர்கள் மற்றும் ரயில்வே காவல் துறை சார்பாக குழந்தைகள் பாதுகாப்புக்காக ஆட்டோ ஒட்டுநர்கள், கால் டாக்சி ஒட்டுநர்கள், லோடு மேன்கள் மற்றும் போட்டர்ஸ் ஆகியோருக்கு அடையாள அட்டைகள் இன்று கோவையில் வழங்கப்பட்டன. இந்த அடையாள அட்டைகளை 266 பேருக்கு ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜோர்ஜ் வழங்கினார்.

ரயில் நிலையத்தில் குழந்தைகள் காணாமல் போனாலோ அல்லது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலோ அடையாள அட்டை உள்ளவர்கள் உடனே அவர்களை மீட்டு அருகில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள். இதனால் குழந்தைகள் கடத்தப்படுவது, பெருமளவு தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஜோர்ஜி ஜோர்ஜ் பேசுகையில், "உலகில் குழந்தைகள் அதிகம் உள்ள நாடு இந்தியா. 18 வயதிற்கும் கீழ் உள்ள 45 கோடிக்கும் அதிகமானவர்கள் இந்தியாவில் உள்ளனர். குழந்தைகள் அனைவருக்கும் நல்ல கல்வி மற்றும் பாதுகாப்பு நாம் கொடுக்க வேண்டும். அது நம் கடமை. குழந்தைகள் தொலைந்து போனால் பேருந்து நிலையம் அல்லது ரயில் நிலையங்களுக்குத் தான் முதலில் அவர்கள் வருவார்கள். அவ்வாறு வரும் குழந்தைகளை பாதுகாக்க இந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



குழந்தைகள் தனியாக வரும் போது சமூக விரோதிகளால் அவர்கள் கடத்தப்படும் வாய்ப்பு அதிகம். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழக ரயில் நிலையங்களில் 6 ஆயிரத்து 663 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 

கோவை ரயில் நிலையத்தை நூறு சதவிகிதம் குழந்தைகள் பாதுகாப்பு நிலையமாக மாற்ற முடியும். அதற்காக அடையாள அட்டை பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்." என்றார்.



இந்த நிகழ்ச்சியில் ரயில் நிலைய இயக்குநர் டி.சதிஷ் சரவணன், நிலைய மேலாளர் எல்.சின்ராசு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...