கோவையில் மார்ச் 3-ம் தேதி சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடக்கம்

கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

கோவை : கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. 

போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது பெயர், விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு ஸ்மார்ட் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட் அட்டையைக் கொண்டு அருகிலுள்ள சைக்கிள் நிலையத்திலிருந்து தாங்களாகவே சைக்கிளை எடுத்துக்கொள்ளவும், மாநகரிலுள்ள எந்த நிலையத்திலும் நிறுத்திவிட்டுச் செல்லவும் முடியும்.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை வரும் மார்ச் 3-ம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் சார்பில் 3-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சியானது, ஆர்.எஸ். புரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...