கோவையில் மார்ச் 3-ம் தேதி சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடக்கம்

கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

கோவை : கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டம் வரும் மார்ச் 3-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது. 

போக்குவரத்து நெரிசல், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, மெக்ஸிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பின்பற்றும் 'சைக்கிள் ஷேரிங்' எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகம் செய்ய கோவை மாநகராட்சி முடிவு செய்தது. இதற்காக, ஜி.பி.எஸ். உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் கொண்ட சைக்கிள்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சைக்கிளை வாடகைக்குப் பெற விரும்புவோர் தங்களது பெயர், விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு ஸ்மார்ட் அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த ஸ்மார்ட் அட்டையைக் கொண்டு அருகிலுள்ள சைக்கிள் நிலையத்திலிருந்து தாங்களாகவே சைக்கிளை எடுத்துக்கொள்ளவும், மாநகரிலுள்ள எந்த நிலையத்திலும் நிறுத்திவிட்டுச் செல்லவும் முடியும்.

இந்த நிலையில், ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டத்தின்கீழ், கோவையில் முதல்முறையாக சைக்கிள் ஷேரிங் எனும் வாடகை சைக்கிள் திட்டத்தை வரும் மார்ச் 3-ம் தேதி உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்கான டெண்டரை ஓஃபோ என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சியின் சார்பில் 3-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சியானது, ஆர்.எஸ். புரத்தில் உள்ள எஸ்.ஆர்.பி. அம்மணி அம்மாள் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. இதில், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன், மாநகராட்சி நிர்வாக ஆணையர் ஜி. பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...