உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
நீலகிரி: உதகை அருகே உள்ள முத்தோரை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
இராமன் விளைவு கண்டுபிடிப்பிற்கு சர்.சி.வி ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைக் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி உதகை அருகேயுள்ள முத்தோரை வானியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்கவும், அறிவியல் துறையில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், இம்மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இம்மையத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய தொலை நோக்கிகளில் ஒன்றான 530 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட தொலை நோக்கி பல அரிய வானியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இராமன் விளைவு கண்டுபிடிப்பிற்கு சர்.சி.வி ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதனைக் கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி உதகை அருகேயுள்ள முத்தோரை வானியல் ஆராய்ச்சி மையத்தில் மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்கவும், அறிவியல் துறையில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், இம்மையத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இம்மையத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய தொலை நோக்கிகளில் ஒன்றான 530 மீட்டர் நீளமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட தொலை நோக்கி பல அரிய வானியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
