வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தீ விபத்திற்குக் காரணம் என்ன?: அறிக்கையை சமர்ப்பிக்க ஆணையர் உத்தரவு

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணத்தை உரிய விசாரணை நடத்த அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

கோவை மாநகராட்சிக்குச் சொந்தமாக வெள்ளலூர் பகுதியில் 650 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சி பகுதியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகிறது. தனியார் அடுக்குமாறு குடியிருப்புகள், காய்கறிகள் மார்கெட்டுகள் என பெறப்படும் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகிறது.மற்ற பகுதிகளில் சேகரிக்கப்படும் 

மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரிக்கப்படாமல் இந்த பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பையில் கடந்த சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் தீப்பிடித்தது. வானை நோக்கி எழுந்த கரும் புகையால் அப்பகுதியில் உள்ள மக்கள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர். இரண்டு நாட்களாக தீயணைப்பு படை வீரர்களின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தின் உண்மையான காரணங்கள் கண்டறியும் பொருட்டு, நேற்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் 5 மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார். 

இக்குழுவில் மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் லட்சுமணன், கிழக்கு மண்டல செயற்பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் ஞானவேல் மற்றும் மாநகர நல அலுவலர் சந்தோஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த விசாரணைக்குழு தீ விபத்து பற்றி உரிய விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். 

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...