மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்

மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

கோவை: மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவரும், தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்க்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வினய் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகளவில் இந்திய மருத்துவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் 90 சதவிகிதம் இந்திய மருத்துவர்களே உள்ளனர். நேற்று சத்திஸ்கரில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பது உண்மையே. வெளி மாநிலத்தில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.



5 வருடத்தில் 36 தேர்வுகள் எழுது வேண்டும். 7 நாட்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் பணிச் சுமை காரணமாக மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வருகிறது. டெல்லியில் மருத்துவ மாணவர்கள் சரவணன் மற்றும் சரத்பாபு ஆகிய இருவர் தற்கொலையின் போதே இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு மூன்று கோரிக்கைகள் வைத்தது. அதை நிறைவேற்றி இருந்தால் ராமேவேஸ்வரம் மாணவரின் தற்கொலை நிகழ்ந்து இருக்காது. 

இரண்டு மாணவர்களின் மர்ம மரணத்தின் போதே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்போதே வலியுறுத்தினோம். தகுதி அடிப்படையில் சேரும் மாணவர்களின் மரணத்தில் உள்நோக்கம் உள்ளதா என்பதில் அறிந்தால் மட்டுமே மேலும் மாணவர்களின் மரணம் தொடராமல் இருக்கும். மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ உதவி மையம் அமைக்க வேண்டும். தமிழகத்தைப் போன்று மன அழுத்தம் காரணமாக மற்ற மாநிலங்களிலும் மாணவர்களின் மரணம் தொடர் கதையாகி வருகிறது. திருப்பூர் மாணவர்களின் மரணத்தில் இது வரை டெல்லி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், மூன்று மாணவரின் தற்கொலைக்கான உரிய காரணத்தை அரசுகளும், காவல்துறையினரும் துரிதமாக விசாரிக்க வேண்டும்." என்றார் 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...