மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம்

மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

கோவை: மத்திய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவரும், தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்க்கும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வினய் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உலகளவில் இந்திய மருத்துவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் 90 சதவிகிதம் இந்திய மருத்துவர்களே உள்ளனர். நேற்று சத்திஸ்கரில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருத்தம் அளிக்கிறது. மாணவர்களுக்கு மன அழுத்தம் இருப்பது உண்மையே. வெளி மாநிலத்தில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.



5 வருடத்தில் 36 தேர்வுகள் எழுது வேண்டும். 7 நாட்கள் 24 மணி நேரமும் மருத்துவமனையில் இருக்க வேண்டும் உள்ளிட்ட கூடுதல் பணிச் சுமை காரணமாக மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வருகிறது. டெல்லியில் மருத்துவ மாணவர்கள் சரவணன் மற்றும் சரத்பாபு ஆகிய இருவர் தற்கொலையின் போதே இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு மூன்று கோரிக்கைகள் வைத்தது. அதை நிறைவேற்றி இருந்தால் ராமேவேஸ்வரம் மாணவரின் தற்கொலை நிகழ்ந்து இருக்காது. 

இரண்டு மாணவர்களின் மர்ம மரணத்தின் போதே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்போதே வலியுறுத்தினோம். தகுதி அடிப்படையில் சேரும் மாணவர்களின் மரணத்தில் உள்நோக்கம் உள்ளதா என்பதில் அறிந்தால் மட்டுமே மேலும் மாணவர்களின் மரணம் தொடராமல் இருக்கும். மாணவர்களின் நலனில் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ உதவி மையம் அமைக்க வேண்டும். தமிழகத்தைப் போன்று மன அழுத்தம் காரணமாக மற்ற மாநிலங்களிலும் மாணவர்களின் மரணம் தொடர் கதையாகி வருகிறது. திருப்பூர் மாணவர்களின் மரணத்தில் இது வரை டெல்லி காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில், மூன்று மாணவரின் தற்கொலைக்கான உரிய காரணத்தை அரசுகளும், காவல்துறையினரும் துரிதமாக விசாரிக்க வேண்டும்." என்றார் 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...