சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக தனியார் மருத்துவமனை மீது புகார்

கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஜான் என்ற மகன் உள்ளார்.

கோவை: கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஜான் என்ற மகன் உள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அன்று செட்டிபாளையம் சாலையில் நடந்து சென்ற சேசுராஜ் மீது காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூர் செல்லும் அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலன் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அங்கு இரண்டு மணி நேரம் தாமதமாக சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. 

தொடர்ந்து அவர் திருச்சி சாலையிலுள்ள ரிச்மண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துள்ளனர்.

ரிச்மண்ட் மருத்துவமனை நிர்வாகத்தினர் திங்கள் கிழமை இரவு உறவினர்களிடம் அனுமதி வாங்காமல் சேசுராஜீக்கு கையில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து செவ்வாய்கிழமை காலையில் உறவினர்கள் சேசுராஜை பார்த்துள்ளனர். அப்போது அவர் சத்தம் போட்டுள்ளார். மருத்துவமனையில் பணியில் இருந்தவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை அளித்துள்ளனர்.மூச்சு வராததால் செயற்கை சுவாசம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து புதன் கிழமை காலை மூச்சு விட திணறுவதாகவும், நுரையீரலுக்கு கீழே இடுப்பில் குழாய் போட்டால் சரியாகிவிடும் என மருத்துவமனையில் சார்பில் கூறியுள்ளனர். மேலும், மூளையில் ரத்தம் உறைந்து இருப்பதாகவும், அதற்கு மருந்து கொடுத்தால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். 

ஒவ்வொரு பாகமும் பாதிக்கப்படுவதாகக் கூறி உண்மையை மறைத்து கடந்த ஏழு நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பந்தய சாலையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சேசுராஜை பார்த்து விட்டு அவரை இந்த மருத்துவமனையில் இருந்து மற்ற மருத்துவமனைக்கு மாற்றினால் உயிருக்கு ஒரு சதவிகிதம் கூட உத்திரவாதம் இல்லை எனக்கூறியுள்ளனர். இதனையடுத்து அவரது உறவினர்களிடம் ரிச்மண்ட் நிர்வாகம் ஒரு லட்சத்து ஏழுபதாயிரம் ரூபாய் பணம் கட்டி வேறு மருத்துவமனைக்கு சேசுராஜை மாற்றச்சொல்லி வற்புறுத்துகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகம் பொய்யான தகவலை சொல்லி அலைக்கழித்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பந்தய சாலை காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அவரது உறவினர்கள் சேசுராஜை பார்க்க வேண்டும் எனக்கூறியதால் அழைத்துசென்றனர்.

தற்போது அவர் உயிர் இருக்கிறதா இல்லையா எனத்தெரியாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், காவல் துறையை வைத்து மிரட்டுவதாகவும் புகார் கூறினர்.



ஏற்கனவே 1, 75,000 ரூபாய் பணம் கட்டியும் , மீண்டும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், ஆதார் கார்டு உட்பட அனைத்து அசல் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டு அரசு காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...