பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்கள் வரவேற்பு

பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்களிடம் இருந்து பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்களை வரவேற்பதாகத் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

கோவை: பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்களிடம் இருந்து பழமை வாய்ந்த ரயில்வே புகைப்படங்களை வரவேற்பதாகத் தென்னக ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

சேலம் கோட்டத்தின் நீலகிரி மலை ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில்நிலையங்கள் மற்றும் தடங்கள், சிக்னல்கள், போன்ற ரயில்வே அமைப்புகள் பற்றிய தொன்மையான புகைப்படங்களை மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் திட்டமிட்டுள்ளது. 

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் ரயில் தொன்மை ஆர்வலர்கள் தங்களிடம் புகைப்படம் இருந்தால் அவற்றை சேலம் கோட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு தென்னக ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் தென்னக ரயில்வே சர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதி எடுத்த பின் அவை மீண்டும் உரியவர் கையில் திருப்பித் தரப்படுவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேட்டுப்பாளையம் ரயில் அருங்காட்சியகத்திலும் நீலகிரி மலை ரயில் பெட்டிகளிலும் வழங்கியவர் பெயர் குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். எனவே, அத்தகு புகைப்படங்கள் வைத்திருப்போர், அவற்றை வழங்கி ரயில்வே நிர்வாகத்திற்கு உதவும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என கூறப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...