மசினகுடி அருகேயுள்ள பொக்கபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்.
நீலகிரி: மசினகுடி அருகேயுள்ள பொக்கபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது நீலகிரி மாவட்டம். இங்கு முற்காலங்களில் அக்கா, தங்கைகள் என 9 பேர் ஆனைகட்டி, சிறியூர், சொக்கநல்லி, பொக்காபுரம் உள்ளிட்ட 9 இடங்களில் அமர்ந்து தெய்வங்களாக மாறியதாக மக்களால் நம்பப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி பொக்காபுரம் மாரியம்மன் திருக்கோவில் திருத்தேர் திருவிழா நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
பிரமுகர்கள் சென்ற பின் பக்தர்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.
