திருப்பூரில் கடையில் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பெண்களை சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூரில் கடையில் நூதன முறையில் நகைகளை திருடிய சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பெண்களை சி.சி.டி.வி., காட்சிப் பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கவரிங் நகைகளை மொத்தமாக வியாபாரம் செய்பவர் பவர்சிங். நேற்று மாலை மூன்று பெண்கள் கவரிங் நகைகளை வாங்குவது போல் இவரது கடைக்கு வந்துள்ளனர். அப்போது, கடை ஊழியர்களை நூதனமாக ஏமாற்றி கவரிங் நகைகள் வைத்திருந்த மூன்று பெட்டிகளை புடவைக்குள் மறைத்து திருடிச் சென்றனர். முதலில் இருபெண்கள் மட்டும் சென்றதால், சந்தேகமடைந்த கடை ஊழியர்கள் மூன்றாவதாக இருந்த பெண்ணை பிடித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கைதான பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.