நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,200 கோடி கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கை வெளியீடு

கோவை மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டார்.

கோவை: கோவை மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டார். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நபார்டு வங்கியின் 2018-19ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை வெளியிட்டார். 



ஓவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும், வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. நிகழ் ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதிதேவை 8 சதவீதம் உயர்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்த நிதி ஆற்றல் ஆன ரூ. 18,243.16 கோடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஆற்றல் 44 சதவீதமும், வேளாண் மற்றும் அதன் இணை தொழில்களுக்கு 37 சதவீதமும், இதர தொழில்களுக்கு 19 சதவீதமும் இருக்கின்றது. நபார்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே வங்கிகளுக்கான கடன் திட்டத்தை மாவட்ட முன்னோடி வங்கி தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கனகராஜ், நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி வசீகரன், பல்லவன் கிராம வங்கி மண்டல மேலாளர் சந்திரன் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் வெங்கிடகிருஷ்ணன் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...