கோவை மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டார்.
கோவை: கோவை மாவட்டத்திற்கு நபார்டு வங்கியின் மூலம் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெளியிட்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நபார்டு வங்கியின் 2018-19ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.

ஓவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும், வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. நிகழ் ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதிதேவை 8 சதவீதம் உயர்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்த நிதி ஆற்றல் ஆன ரூ. 18,243.16 கோடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஆற்றல் 44 சதவீதமும், வேளாண் மற்றும் அதன் இணை தொழில்களுக்கு 37 சதவீதமும், இதர தொழில்களுக்கு 19 சதவீதமும் இருக்கின்றது. நபார்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே வங்கிகளுக்கான கடன் திட்டத்தை மாவட்ட முன்னோடி வங்கி தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கனகராஜ், நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி வசீகரன், பல்லவன் கிராம வங்கி மண்டல மேலாளர் சந்திரன் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் வெங்கிடகிருஷ்ணன் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நபார்டு வங்கியின் 2018-19ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் ரூ. 18,243.16 கோடி மதிப்பில் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையினை வெளியிட்டார்.

ஓவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும், வளம் சார்ந்த வங்கிக் கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. நிகழ் ஆண்டைக் காட்டிலும் வரும் ஆண்டிற்கான நிதிதேவை 8 சதவீதம் உயர்ந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மொத்த நிதி ஆற்றல் ஆன ரூ. 18,243.16 கோடியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிதி ஆற்றல் 44 சதவீதமும், வேளாண் மற்றும் அதன் இணை தொழில்களுக்கு 37 சதவீதமும், இதர தொழில்களுக்கு 19 சதவீதமும் இருக்கின்றது. நபார்டு திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே வங்கிகளுக்கான கடன் திட்டத்தை மாவட்ட முன்னோடி வங்கி தயாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளர் கனகராஜ், நபார்டு மாவட்ட வளர்ச்சி அதிகாரி வசீகரன், பல்லவன் கிராம வங்கி மண்டல மேலாளர் சந்திரன் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் வெங்கிடகிருஷ்ணன் மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.