பள்ளி குழந்தைகள் பராமரித்து வரும் மூலிகை தோட்டம்

உதகை ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகள் மூலிகை தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகின்றனர்.

நீலகிரி: உதகை ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய பள்ளி குழந்தைகள் மூலிகை தோட்டம் ஒன்றைப் பராமரித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 13 மாணவர்களுடன் மூடு விழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது உதகை அருகேயுள்ள ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஆனால், தற்போது 102 மாணவ, மாணவியருடன் மீண்டெழுந்திருக்கிறது.

இங்குள்ள சுற்று வட்டார கிராமங்களில் வசிப்போரில் 90 சதவீதம் பேர் கூலி தொழிலாளர்கள். பள்ளி தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்கள் வீடுதோறும் சென்று தரமான ஆங்கில வழிக் கல்வி, ஊட்டச்சத்து உணவு, இலவச கல்வி வழங்குகிறோம். என பிரசாரம் செய்தனர். அதற்குப் பெற்றோர் மத்தியில் கிடைத்த நம்பிக்கையே இப்பள்ளியின் அசத்தலான வளர்ச்சிக்கு அச்சாணியாய் இருந்திருக்கிறது.

அதற்கேற்ப தற்போது ஆங்கில வழி கல்வியிலும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பராமரிக்கப்படும் மூலிகை தோட்டத்தில் மாணவர்களை கொண்டே மூலிகை தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன.



பள்ளி பி.டி.ஏ-வின் ஒத்துழைப்புடன் கராத்தே, யோகா, இசைக்கருவி மீட்டுவது போன்ற பயிற்சிகளும், ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் கணினி சார்ந்த கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

தேசிய பசுமைப்படை இளஞ்செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளும் கச்சிதமாய் செயல்படுகின்றன. இதன் விளைவு சரிந்து போன மாணவர் எண்ணிக்கை சதம் கடந்து நிற்கிறது.

இது குறித்து தலைமையாசிரியை சோபா கூறுகையில், "பள்ளியின் இதமான சுற்றுச்சூழல், தரமான கல்விக்கு கிடைத்த பலன் தான் இந்த மாற்றம். குறிப்பாக ஆங்கில வழிக்கல்வி பெற்றோரை திருப்திப்படுத்தியுள்ளது." என்றார்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...