அணை கட்டுவதை தடுத்து நிறுத்துங்க

கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது சிறுவாணி மற்றும் பவானி ஆறுகள். இந்த இரண்டு ஆறுகளுமே நமது அண்டை மாநிலமான கேரளாவின் பாலக்காடு மாவட்டத்திற்குள் நுழைந்து, மீண்டும் மேட்டுப்பாளையம் மலைப்பகுதியினை அடைந்து சிறுவாணி ஆறு பவானியுடன் கலந்து தமிழகத்தை வந்தடைகிறது. 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்த சிறுவாணி மற்றும் பவானி ஆற்றின் குறுக்கே அடிக்கடி அணையை கட்டி தண்ணீரினை தடுக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது கேரள அரசு. கடந்த ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சு கண்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் சுமார் 5 அடிக்கும் மேல் தடுப்பணைகளை கட்டி தண்ணீரினை தேக்கிவைத்துள்ளது. இதனைக் கண்டித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும் அரசியல் கட்சியினரும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கேரள அரசு தடுப்பணைகளை கட்டி முடித்து விட்டது.



இதனால் கடந்த ஆண்டு கோவைக்கு குடி நீர் வழங்கும் பில்லூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இந்த நிலையில், தற்போது கோட்டைத்துறை என்னும் இடத்தில் கேரள அரசின் சோலையூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மேலும் ஒரு தடுப்பணையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 

இது கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கோட்டத்துறை சிறுவாணி ஆற்றுப் பாலம் அருகே இடம் தேர்வு செய்து அங்கு மணல் மூட்டைகளை அடுக்கியும் ஜே.சி.பி இயந்திரங்களை கொண்டு கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல வழியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தண்ணீர் வரத்து குறைவாக உள்ள நிலையில் இந்த தடுப்பணையும் கட்டப்பட்டால் பவானி ஆற்றில் நீர் வரத்து மேலும் குறைந்து விடும். இந்த பவானி ஆற்றின் நீரினை நம்பி 15 க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தில் தண்ணீர் எடுப்பதில் சிக்கல் உண்டாகும். அத்துடன் மேட்டுப்பாளையம் முதல் பவானி சாகர், ஈரோடு என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி பலவனங்களாக மாறும் நிலை உருவாகும். எனவே தமிழக அரசும் தமிழக அரசு நிர்வாகமும் முதலமைச்சரும் உடனடியாக துரிதமாக செயல்பட்டு கேரள அரசின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோவை மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...