தேசிய கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான, தேசிய கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவை மாவட்ட சிறுபான்மையின மாணவர்களுக்கான, தேசிய கல்வி உதவித் தொகை பெற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவிக்கையில் :- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வாழ்க்கை தொழிற்கல்வி (ஐ.டி.ஐ), பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிருத்துவர், இஸ்லாமியர், புத்த மதத்தினர், சீக்கியர், ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்குப் பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித் தொகை இணையம் www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மூலம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காணும் இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும். எனவே, இம்மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளுமாறும், AISHE/UDISE எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அவ்விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறும், AISHE எண் பெறாத கல்வி நிலையங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம்.

மேலும், பள்ளிகளைப் பொறுத்தவரை UDISE எண்ணிற்கு முதன்மை கல்வி அலுவலரை அணுகுமாறும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இணையத்தில் கல்வி நிலையத்தினை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர்/தலைமையாசிர்கள் கோரிக்கை கடிதம், (சுய ஒப்பமிட்டது) தலைமையாசிரியர்/முதல்வர்/டீன் பெயர், மொபைல் எண் (அவசியம்) AISHE/UDISE எண். கல்வி நிலையத்தின் முழு முகவரி மற்றும் வேறு இதர விவரங்களுடன் (கோரப்படும் பட்சத்தில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலரை உடன் தொடர்பு கொள்ளலாம், கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் (www.scholarships.gov.in) பதிவு செய்வதற்கான கடைசி தேதி 31.03.2018 ஆகும். 

அது வரை இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே 2018-19-ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன் பெற இயலும் எனவும், மேலும், விவரங்களுக்கு கோவை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகவேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...