கியூப் அமைப்பினர் சார்பில் குளங்களை பாதுகாப்பது தொடர்பாக நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கோவை: கியூப் அமைப்பினர் சார்பில் குளங்களை பாதுகாப்பது தொடர்பாக நேற்று சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கியூப் தன்னார்வ அமைப்பினர் கோவை மாநகராட்சி மற்றும் டிக்கத்தலானுடன் இணைந்து நேற்று 15 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் 30-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டிகள் கலந்து கொண்டு நீலம்பூரில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணி சிங்காநல்லூர் குளக்கரையில் முடிவடைந்தது. தொடர்ந்து, அக்குளத்தின் கரையில் செடிகளை நடவு செய்தனர்.

பின்னர், கியூப் அமைப்பின் சார்பில் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு குளக்கரையை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

கியூப் தன்னார்வ அமைப்பினர் கோவை மாநகராட்சி மற்றும் டிக்கத்தலானுடன் இணைந்து நேற்று 15 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் 30-க்கும் மேற்பட்ட சைக்கிள் ஓட்டிகள் கலந்து கொண்டு நீலம்பூரில் இருந்து பேரணியாக சென்றனர். இந்த பேரணி சிங்காநல்லூர் குளக்கரையில் முடிவடைந்தது. தொடர்ந்து, அக்குளத்தின் கரையில் செடிகளை நடவு செய்தனர்.

பின்னர், கியூப் அமைப்பின் சார்பில் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கு குளக்கரையை பாதுகாப்பதன் அவசியம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.