சிறுவனை கொன்று தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்த மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை

விழுப்புரம் அருகே தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, 8 வயது சிறுவனை கொலை செய்த மர்ம கும்பலை கைது செய்ய 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது


விழுப்புரம் அருகே தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, 8 வயது சிறுவனை கொலை செய்த மர்ம கும்பலை கைது செய்ய 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

அரகந்தநல்லூர் பகுதிக்கு அருகேயுள்ள வேலம்புதூர் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (பிப்.,22) அன்று நள்ளிரவில் மர்ம கும்பல் தலீத் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு அத்துமீறி உள்ளே நுழைந்தது. அப்போது, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியையும், அவரது தாயாரையும் அந்த மர்ம கும்பல் கொடூரமாகத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த 8 வயது சிறுவனையும் கொடுமையாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனது. 



மறுநாள் காலையில் வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது, தாய், மகள், மகன் என மூவரும் இரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல முற்பட்ட போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாரின் உதவியுடன் இரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்த சிறுவனின் தாயையும், சகோதரியையும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர்கள் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, பாதிக்கப்பட்ட தலீத் குடும்பத்திற்கும், அவர்களுக்கு அருகில் இருந்த பிற சமூகத்தை சார்ந்த குடும்பம் ஒன்றிற்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. அதன் அடிப்படையிலேயே, இந்தக் கொடூரத் தாக்குதல் நடந்திருக்கலாம், என்றனர். இதைத் தொடர்ந்து, தலீத் சிறுவனை கொலை செய்துவிட்டு அவரின் தாயையும், சகோதரியையும் பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர்களை பிடிக்க 5 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 



விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதிக்குப் பிறகு தலீத் சமூகத்தினர் மீது நடத்தப்படும் 3-வது கொடூரத் தாக்குதல் இதுவாகும். விழுப்புரம் பகுதியில் தலீத் சமூகத்தினர் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...