சிறுவாணி விவகாரம் : வாயில் கறுப்பு துணியுடன் விவசாயிகள் மனு

ஆழியாறு மற்றும் சிறுவாணி பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் சுமூகமான முடிவை எடுக்க வலியுறுத்தி இன்று வாயில் கருப்புத் துணி கட்டி வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவதிடம் மனு அளித்தனர்.


கோவை: ஆழியாறு மற்றும் சிறுவாணி பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் சுமூகமான முடிவை எடுக்க வலியுறுத்தி இன்று வாயில் கருப்புத் துணி கட்டி வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவதிடம் மனு அளித்தனர்.

ஆழியாறு அணையில் இருந்து 2.5 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழகத்தை ஒட்டியிருக்கும் எல்லையில் கேரள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக வாகனங்களை சேதப்படுத்தப்பட்டன. இதை கண்டித்து இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கருப்புத் துணியுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர். 



அவர்கள் கூறுகையில், "சிறுவாணி, பில்லூர் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு வழங்கி வரும் நீர் வழிப்பாதைகளில் தடுப்பு ஏற்படுத்தி,கோவை மக்களின் குடிநீர் அளவீடு குறைந்து வருவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். கொங்கு மண்டல நீர் ஆதாரங்கள், குடிநீர் திட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஆய்வு செய்து பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். 

கேரள முதல்வர் பினராயி விஜயன் நதிநீர் குறித்து பேச தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளதை பயன்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சுமூகமான தீர்வை அளிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்புகள் நடைமுறைப்படுத்த மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்." என்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...