ஆழியாறு மற்றும் சிறுவாணி பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் சுமூகமான முடிவை எடுக்க வலியுறுத்தி இன்று வாயில் கருப்புத் துணி கட்டி வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவதிடம் மனு அளித்தனர்.
கோவை: ஆழியாறு மற்றும் சிறுவாணி பிரச்சனையில் இரு மாநில அரசுகளும் சுமூகமான முடிவை எடுக்க வலியுறுத்தி இன்று வாயில் கருப்புத் துணி கட்டி வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவதிடம் மனு அளித்தனர்.
ஆழியாறு அணையில் இருந்து 2.5 டி.எம்.சி., தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழகத்தை ஒட்டியிருக்கும் எல்லையில் கேரள விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக வாகனங்களை சேதப்படுத்தப்பட்டன. இதை கண்டித்து இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வாயில் கருப்புத் துணியுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

அவர்கள் கூறுகையில், "சிறுவாணி, பில்லூர் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு வழங்கி வரும் நீர் வழிப்பாதைகளில் தடுப்பு ஏற்படுத்தி,கோவை மக்களின் குடிநீர் அளவீடு குறைந்து வருவது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். கொங்கு மண்டல நீர் ஆதாரங்கள், குடிநீர் திட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஆய்வு செய்து பாதிப்புகள் ஏற்படாதவாறு தமிழக அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நதிநீர் குறித்து பேச தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளதை பயன்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சுமூகமான தீர்வை அளிக்க வேண்டும். ஏற்கனவே உள்ள நீதிமன்ற தீர்ப்புகள் நடைமுறைப்படுத்த மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்." என்றனர்.