அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள் மனு

அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: அரசு பள்ளி மாணவர்கள் 32 பேர் தங்கள் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை நஞ்சுண்டாபுரம் அனுப்பர்பாளையத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை செயல்படும் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஆங்கிலம், தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஆசிரியர்கள் நியமிக்கப் படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வந்தது. 

இந்த நிலையில், அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் கூட இல்லை என்றும், உடனடியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரி 32 மாணவர்கள் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கடந்த 19-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத காரணத்தினால் வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவர்கள் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...