ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
கோவை: ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். ஆழியாறு பிரச்சனையை அரசு கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சனையை மையமாக வைத்து கேரளா அரசு சிறுவாணியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும்.
அட்டப்பாடியில் ஆதிவாசி வாலிபர் மது-வை தாக்கி கொலை செய்தவர்கள் மீது பினராயி விஜயன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு சர்வாதிகாரி போல் உள்ளது. சங் பரிவார் அமைப்புகளின் ஊது குழலாக மோடி செயல்படுகிறார். எல்லா மட்டங்களிலும் இந்தியை மத்திய அரசு திணிக்கின்றது. பன்முக தன்மையை எல்லா விதத்திலும் சிதைக்கிறது. அ.தி.மு.க.,வை அரசியல் ரீதியாக மட்டும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதே நேரத்தில் முதலமைச்சர் இருக்கிற போது அரசு செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் இடைத் தரகரா அல்லது என்ற கேள்வி எழுந்துள்ளது." என்றார்.