சிறுவாணி அணை விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வுகாண வைகோ வலியுறுத்தல்

ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.


கோவை: ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டுமென ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

கோவை விமான நிலையத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஆழியாறு, சிறுவாணி அணை விவகாரங்களில் தமிழக மற்றும் கேரள அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். ஆழியாறு பிரச்சனையை அரசு கவனமாக கையாள வேண்டும். இந்த பிரச்சனையை மையமாக வைத்து கேரளா அரசு சிறுவாணியில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடுவதை நிறுத்த வேண்டும். 

அட்டப்பாடியில் ஆதிவாசி வாலிபர் மது-வை தாக்கி கொலை செய்தவர்கள் மீது பினராயி விஜயன் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி பேச்சு சர்வாதிகாரி போல் உள்ளது. சங் பரிவார் அமைப்புகளின் ஊது குழலாக மோடி செயல்படுகிறார். எல்லா மட்டங்களிலும் இந்தியை மத்திய அரசு திணிக்கின்றது. பன்முக தன்மையை எல்லா விதத்திலும் சிதைக்கிறது. அ.தி.மு.க.,வை அரசியல் ரீதியாக மட்டும் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதே நேரத்தில் முதலமைச்சர் இருக்கிற போது அரசு செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் இடைத் தரகரா அல்லது என்ற கேள்வி எழுந்துள்ளது." என்றார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...