மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மூடுதுரை மீனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கோகுல கண்ணன் ( 21) தமிழ்ச்செல்வன் (21) தமிழ்வாணன் (22). இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் நேற்று காரமடைக்கு சென்று கொண்டிருந்தனர். செங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார்(31), சித்ரா (38), தன்சிகா(6), சாவித்திரி ஆகியோர் அவர்களது இரு சக்கர வாகனத்தில் புளியம்பட்டி சென்று கொண்டிருந்தனர் .
அவர்களது வாகனம் மூடுதுரை பேருந்து நிலையம் அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
ஆனால், கோகுலக்கண்ணன், மகேஷ்குமார் மற்றும் குழந்தை தன்சிகா ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர், மற்ற மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.