சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட 3 பேர் பலி

மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 6 வயது குழந்தை உட்பட முன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த மூடுதுரை மீனம்பாளையத்தை சேர்ந்தவர்கள் கோகுல கண்ணன் ( 21) தமிழ்ச்செல்வன் (21) தமிழ்வாணன் (22). இவர்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் நேற்று காரமடைக்கு சென்று கொண்டிருந்தனர். செங்கப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார்(31), சித்ரா (38), தன்சிகா(6), சாவித்திரி ஆகியோர் அவர்களது இரு சக்கர வாகனத்தில் புளியம்பட்டி சென்று கொண்டிருந்தனர் .

அவர்களது வாகனம் மூடுதுரை பேருந்து நிலையம் அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

ஆனால், கோகுலக்கண்ணன், மகேஷ்குமார் மற்றும் குழந்தை தன்சிகா ஆகிய மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர், மற்ற மூன்று பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...