ஜெ., சிலை அவசரமாக வடிவமைக்கப்பட்டதால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

கோவை,திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும். சிறுவாணி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சிறுவாணி அணையில் வீணாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.தமிழக லாரிகள் கேரளாவில் தாக்கப்பட்டது தொடர்பாக கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இப்பிரச்சனை பேசி தீர்க்கப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை செய்வது சிற்பிகளுக்கு புதியதாக இருக்கும் என்பதாலும், அவரது பிறந்த நாளுக்குள் சிலை திறக்க வேண்டுமென்ற அவசரத்தில் செய்ததாலும் சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி பெரிய மாற்றங்கள் இருந்தால் அது சரி செய்யப்படும். என்று பேசினார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...