ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கோவை,திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும். சிறுவாணி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சிறுவாணி அணையில் வீணாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.தமிழக லாரிகள் கேரளாவில் தாக்கப்பட்டது தொடர்பாக கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இப்பிரச்சனை பேசி தீர்க்கப்படும்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை செய்வது சிற்பிகளுக்கு புதியதாக இருக்கும் என்பதாலும், அவரது பிறந்த நாளுக்குள் சிலை திறக்க வேண்டுமென்ற அவசரத்தில் செய்ததாலும் சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி பெரிய மாற்றங்கள் இருந்தால் அது சரி செய்யப்படும். என்று பேசினார்.