ஜெ., சிலை அவசரமாக வடிவமைக்கப்பட்டதால் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: ஜெ., சிலை செய்வது சிற்பிகளுக்கு புதிது என்பதாலும், அவசரத்தில் வடிவமைக்கப்பட்டதால் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது அவர் பேசியதாவது:- 

கோவை,திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில், ஆழியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு தண்ணீர் திறந்து விடப்படும். சிறுவாணி அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, சிறுவாணி அணையில் வீணாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது.தமிழக லாரிகள் கேரளாவில் தாக்கப்பட்டது தொடர்பாக கேரள அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். இப்பிரச்சனை பேசி தீர்க்கப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலை செய்வது சிற்பிகளுக்கு புதியதாக இருக்கும் என்பதாலும், அவரது பிறந்த நாளுக்குள் சிலை திறக்க வேண்டுமென்ற அவசரத்தில் செய்ததாலும் சிறு மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். அப்படி பெரிய மாற்றங்கள் இருந்தால் அது சரி செய்யப்படும். என்று பேசினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...