மின்கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த நபரால் பரபரப்பு

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் கம்பத்தில் ஏறி, இறங்க மறுத்த எலக்ட்ரிசன் சுமார் 2 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூருவைச் சேர்ந்த எலக்ட்ரிஷன் அய்ரின் என்பவர், தனது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சியில் உள்ள தனது மனைவியைப் பார்க்க பேருந்தில் வந்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பேருந்து வந்தபோது, உடல்நலக்குறைவு காரணமாக, சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்ரின் திடீரென்று தன்னைக் கொல்ல வருவதாகக் கூறி அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறி, மேட்டூர் சாலையில் ஓடியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அவர் திடீரென அருகில் இருந்த மின்கம்பத்தில் ஏறினார். பின்னர், அப்பகுதி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும், தீயணைப்புதுறை வரவழைக்கப்பட்டு அவரை கீழே இறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மின்கம்பியிலேயே அய்ரின் அங்கும், இங்கும் ஓடியதால் கீழேஇறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து, இரண்டு மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட அவர், மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...