நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி வாகனத்தில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தது.
மலை மாவட்டமான நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது, சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான வேல்வியூ பகுதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி ஒன்று வாகனத்தில் அடிப்பட்டு இருந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மலை மாவட்டங்களில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் பலியாகி வருவதாகவும், இதுபோன்று நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது, சாலைகளுக்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், உதகையில் இருந்து குன்னூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான வேல்வியூ பகுதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க சிறுத்தைப்புலி ஒன்று வாகனத்தில் அடிப்பட்டு இருந்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்த சிறுத்தைப்புலியின் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மலை மாவட்டங்களில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் வனவிலங்குகள் பலியாகி வருவதாகவும், இதுபோன்று நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீது வனத்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.