குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்ட முடியாமல் திணறல்

நீலகிரி மாவட்டத்தின் அணிக்கொரை கிராமத்தில் கடந்த 5 நாட்களாக முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தின் அணிக்கொரை கிராமத்தில் கடந்த 5 நாட்களாக முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். 



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வருடங்களாக புலி, கரடி, காட்டெருமை, யானை போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும், குடியிருப்புகளையும், நடைபாதைகளையும் சேதப்படுத்தி வருகின்றன. 

இவ்வாறு, வரும் வனவிலங்குகளை ஊருக்குள் இருந்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் போதிய முயற்சிகளை மேற்கொண்டாலும், மீண்டும் அப்பகுதிக்கே வனவிலங்குகள் வருவது வாடிக்கையாகவே உள்ளது. இதனால், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு மனித உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமாகவே உள்ளது. 

இந்நிலையில், உதகையை அடுத்த கடநாடு ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை, தூனேரி கிராமத்தில் கடந்த 5 நாட்களாக ஒற்றை ஆண் காட்டு யானை முகாமிட்டுள்ளது. கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பகல் நேரங்களிலேயே விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. 

அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி எடுத்து வரும் நிலையில், இன்று அணிக்கொரை கிராமத்தில் இருந்து தூனேரி கிராமம் செல்லும் பகுதியில் யானை முகாமிட்டிருந்தது. உடனடியாக அக்கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வன அதிகாரிகள், தீ மூட்டியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களின் உதவியுடன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை யானை தாக்க முயன்றதில், நூலிலையில் அவர் உயிர் தப்பினார். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும், அது மீண்டும் குடியிருப்பு பகுதிக்கே வருவதால் அக்கிராம மக்கள் பீதியுடனே உள்ளனர். 

இதனிடையே, கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பே, உணவு மற்றும் தண்ணீரைத் தேடி இதுபோன்று, குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வருவதாகவும், எனவே, இதனைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...