தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
கோவை : தமிழகத்தில் நிலத்தடி நீரின் வளம் கவலையளிக்கும் விதமாக இருக்கும் நிலையில், அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறுதுளி அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் போதிய அளவு மழை பெய்துள்ள நிலையிலும், இப்போதும் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், நிலத்தடி நீரையே விவசாயிகளும், பொதுமக்களும் நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர் குறைபாடுக்கு மக்கள் தொகைப் பெருக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. அதேவேளையில், சாலைகள் மற்றும் திறந்த வெளிப்பகுதிகளில் விழும் மழைநீர் பாதாள சாக்கடையில் கலந்து மாசடைவதுடன், பிற பகுதிகளுக்கும் பரவி சீர்கேட்டை உருவாக்குகின்றது. எனவே, நிலத்தடி நீரை சீரமைக்கும் முயற்சியாக, கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சேகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கோவையில் பாறைகள் நிறைந்த பகுதிகளில் போர்வேல் மூலம் மழைநீர் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் மாநகராட்சி, சிஜிடபூள்யூ, கோவை ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 600-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மழைகாலங்களில் நிலத்தடி நீர் சேகரிக்கப்படுகிறது. சிறுதுளி அமைப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் போதிய அளவு மழை பெய்துள்ள நிலையிலும், இப்போதும் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. இதனால், நிலத்தடி நீரையே விவசாயிகளும், பொதுமக்களும் நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நிலத்தடி நீர் குறைபாடுக்கு மக்கள் தொகைப் பெருக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. அதேவேளையில், சாலைகள் மற்றும் திறந்த வெளிப்பகுதிகளில் விழும் மழைநீர் பாதாள சாக்கடையில் கலந்து மாசடைவதுடன், பிற பகுதிகளுக்கும் பரவி சீர்கேட்டை உருவாக்குகின்றது. எனவே, நிலத்தடி நீரை சீரமைக்கும் முயற்சியாக, கோவை மாநகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் சேகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது, வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கோவையில் பாறைகள் நிறைந்த பகுதிகளில் போர்வேல் மூலம் மழைநீர் சேகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2005-ம் ஆண்டு முதல் மாநகராட்சி, சிஜிடபூள்யூ, கோவை ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் சுமார் 600-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மழைகாலங்களில் நிலத்தடி நீர் சேகரிக்கப்படுகிறது. சிறுதுளி அமைப்பின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.