வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் திடீர் தீ விபத்து : தீயை அணைப்பதில் மாநகராட்சி அலட்சியம்

கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கொழுந்து விட்டு எரியும் தீயை அணைப்பதில், மாநகராட்சி மெத்தனம் காட்டுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 



வெள்ளலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 654 ஏக்கர் பரப்பளவில் குப்பைக்கிடங்கு உள்ளது. இதில், 238 ஏக்கர் பரப்பளவில் குப்பை பரவி காணப்படுகிறது. மாநகராட்சியின் 100 வார்டுகளில் தினசரி 850 டன் வரை குப்பை சேகரிக்கப்பட்டு வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இந்த நிலையில், இந்தக் குப்பைக்கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகள் கொழுந்துவிட்டு எரிகின்றன. இதன் காரணமாக, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. 

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணயில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் வண்டிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைப்பதில் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். சுமார், 3 1/2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து எரிந்து வரும் இந்த தீயினை முழுவதுமாக அணைக்க சுமார் 2 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. 

இதனிடையே, குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், அவ்வப்போது பயங்கர வெடிசத்தமும் கேட்பதால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...