கோவையில் தாமதமாகும் அம்மா இருசக்கர வாகனம் மானிய திட்டம்

தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் சார்பில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ள இருசக்கர வாகன மானிய திட்டம், கோவை மாவட்டத்தில் தாமதாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோவை : தமிழகத்தில் அ.தி.மு.க., அரசின் சார்பில் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ள இருசக்கர வாகன மானிய திட்டம், கோவை மாவட்டத்தில் தாமதாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 2016-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலின்போது அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பணிக்கு செல்லும் பெண்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், அவர்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் மறைந்த நிலையில், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, முதல் கோப்பாக, இருசக்கர வாகன மானிய திட்டத்தில் கையொப்பமிட்டார். தொடர்ந்து மானிய தொகையும் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

இதையடுத்து, இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான இன்று (பிப்.,24) இத்திட்டத்தை பிரதமர் மோடி சென்னையில் தொடங்கி வைக்கிறார். 

முன்னதாக, கடந்த ஜன.22-ம் தேதி முதல் இருசக்கர வாகன மானிய திட்டத்துக்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் வழங்கப்பட்டன. விண்ணப்பிக்க கடைசி நாளான பிப்.10-ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, கோவை மாவட்டத்தில் 22,912 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்தனர். இந்தாண்டு, 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 விண்ணப்பதாரர்களில் தகுதியான ஒரு லட்சம் பேருக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அம்மா இருசக்கர வாகன மானிய திட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இத்திட்டம் அமல்படுத்த இன்னும் 2 வாரங்கள் ஆகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், கோவை மாவட்டத்தில் 22,912 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வெறும் 3,000 விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

பஞ்சாயத்து அலுவலகங்களில் 6,182 விண்ணப்பங்களும், 3 நகராட்சிகளில் 959 விண்ணப்பங்களும், நகர் பஞ்சாயத்தில் 8,588 விண்ணப்பங்களும், மாநகராட்சியில் 10,183 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 1,203 பேருக்கும், நகர் பகுதியில் இருக்கும் 3,746 பேர் என மொத்தம் 4,949 வாகனங்களுக்கு மட்டுமே மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அவற்றில், 22 சதவீதம் எஸ்.பி. பிரிவினருக்கும், 1 சதவீதம் எஸ்.டி. பிரிவினருக்கும், 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...