ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது

கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் : கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் இன்று ஜோய் ஆலுக்காஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட பகுதியில் மழை அளவு குறைந்து வருகிறது. ஆனாலும் ஆண்டு தோறும் வழங்கும் தண்ணீரை தமிழகம் கேரளாவுக்கு திறந்து விட்டு வருகிறது. இந்த ஆண்டு பி.ஏ.பி. திட்டத்தில் சராசரியை விட குறைவான மழையே பெய்தது. இதனால், கேரளத்திற்கு திறந்து விடும் நீரை தமிழக அரசு குறைத்தது. இதனைக் கண்டித்து கேரளா விவசாயிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் போராட்டம் நடத்தினர்.

நேற்று தமிழக-கேரள எல்லையில் கேரள எம்.எல்.ஏ கிருஷ்ணகுட்டி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. இதனைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் நகைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஆர்ப்பாட்டத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். இந்த திடீர் முற்றுகையையடுத்து நகைக்கடை மூடப்பட்டது.  தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...