பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கம்பீர நடை போட்டு வந்த பெண் அதிகாரியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன் தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கம்பீர நடை போட்டு வந்த பெண் அதிகாரியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய விமானப்படையின் விங் கமாண்டரான டி.வட்ஸ் மற்றும் அவரது மனைவி மேஜர் குமுத் மோர்கா. கடந்த பிப்., 15-ம் தேதி அசாமில் நடந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் கமாண்டர் டி.வட்ஸ் உயிரிழந்தார். அவரது மனைவியான ராணுவ மேஜர் குமுத் மோர்கா, அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், வட்ஸ் இறந்த சில நாட்களில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் தனது கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கனத்த இதயத்துடனும், கம்பீர நடையுடனும் குமுத் மோர்கா கலந்து கொண்ட நிகழ்வு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய விமானப்படையின் விங் கமாண்டரான டி.வட்ஸ் மற்றும் அவரது மனைவி மேஜர் குமுத் மோர்கா. கடந்த பிப்., 15-ம் தேதி அசாமில் நடந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் கமாண்டர் டி.வட்ஸ் உயிரிழந்தார். அவரது மனைவியான ராணுவ மேஜர் குமுத் மோர்கா, அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், வட்ஸ் இறந்த சில நாட்களில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்நிலையில் தனது கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் ராணுவ சீருடையில் கனத்த இதயத்துடனும், கம்பீர நடையுடனும் குமுத் மோர்கா கலந்து கொண்ட நிகழ்வு காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.