கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிதாக இரண்டு கோபுர விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் புதிதாக இரண்டு கோபுர விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நான்கு கோபுர விளக்குகள் உள்ளன. இந்த நிலையில், மேலும் இரண்டு புதிய கோபுர விளக்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சென்னை கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சியின் பங்களிப்புடன் இந்த இரண்டு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்த 1500 முதல் 1700 லக்ஸ் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது முறை. முன்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப் பட்டிருந்த மின் கோபுரங்களில் ஒரு கோபுரத்தில் இருபது விளக்குகள் என நான்கு கோபுரத்திலும் சேர்த்து மொத்தம் 900 லக்ஸ் மின் ஒளி கிடைத்தது. தற்போது மாநகராட்சி மற்றும் சென்னை கால்பந்து அணி சார்பில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு கோபுரத்தில் 96 விளக்குகள் பொருத்தப்பட உள்ளதில் மேலும் 900 லக்ஸ் மின் ஒளி கிடைக்க பெற்று சர்வேதேச போட்டிகளில் பயன்படுத்தவதை போல செயல்படும்.

இந்த விளக்குகள் அமைக்கும் பணி வரும் 1-ம் தேதிக்குள் நிறைவு பெற்று, 2-ம் தேதி சென்னை கால்பந்து கழக அணி மற்றும் மின் வாரிய அணிக்கான போட்டி நடத்தப்படும்" என்றார்.

கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் நான்கு கோபுர விளக்குகள் உள்ளன. இந்த நிலையில், மேலும் இரண்டு புதிய கோபுர விளக்குகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சென்னை கால்பந்து அணியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மாநகராட்சியின் பங்களிப்புடன் இந்த இரண்டு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச அளவிலான போட்டிகள் நடத்த 1500 முதல் 1700 லக்ஸ் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பது முறை. முன்னர் நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப் பட்டிருந்த மின் கோபுரங்களில் ஒரு கோபுரத்தில் இருபது விளக்குகள் என நான்கு கோபுரத்திலும் சேர்த்து மொத்தம் 900 லக்ஸ் மின் ஒளி கிடைத்தது. தற்போது மாநகராட்சி மற்றும் சென்னை கால்பந்து அணி சார்பில் அமைக்கப்பட்டு வரும் இரண்டு கோபுரத்தில் 96 விளக்குகள் பொருத்தப்பட உள்ளதில் மேலும் 900 லக்ஸ் மின் ஒளி கிடைக்க பெற்று சர்வேதேச போட்டிகளில் பயன்படுத்தவதை போல செயல்படும்.

இந்த விளக்குகள் அமைக்கும் பணி வரும் 1-ம் தேதிக்குள் நிறைவு பெற்று, 2-ம் தேதி சென்னை கால்பந்து கழக அணி மற்றும் மின் வாரிய அணிக்கான போட்டி நடத்தப்படும்" என்றார்.