காதலர் தினப் பரிசாக கணவருக்கு கல்லீரல் தானம் செய்த மனைவி

கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (36) மற்றும் அவரது மனைவி நிஷா (34). கல்லீரல் செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த ஜாகீர் உசேன், மாற்று கல்லீரல் சிகிச்சைக்காக கடந்த 13-ம் தேதி கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருடைய மனைவி நிஷா, தனது கணவருக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து, இன்று நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நிஷாவின் கல்லீரல், ஜாகீர் உசேனுக்கு மாற்றி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 



இது தொடர்பாக பேசிய ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் பழனிவேலு கூறுகையில், "பிரான்சில் முதல்முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதைத் தொடந்து, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த சிகிச்சை பிரபலமானது. இந்த நிலையில், இந்தியாவில், முதல்முறையாகக் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது," என்றார். 

காதலர் தினத்தையொட்டி, ஒவ்வொருவரும் விலைமதிப்பு மிக்க பொருட்களை வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...