கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (36) மற்றும் அவரது மனைவி நிஷா (34). கல்லீரல் செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த ஜாகீர் உசேன், மாற்று கல்லீரல் சிகிச்சைக்காக கடந்த 13-ம் தேதி கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருடைய மனைவி நிஷா, தனது கணவருக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து, இன்று நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நிஷாவின் கல்லீரல், ஜாகீர் உசேனுக்கு மாற்றி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

இது தொடர்பாக பேசிய ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் பழனிவேலு கூறுகையில், "பிரான்சில் முதல்முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதைத் தொடந்து, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த சிகிச்சை பிரபலமானது. இந்த நிலையில், இந்தியாவில், முதல்முறையாகக் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது," என்றார்.
காதலர் தினத்தையொட்டி, ஒவ்வொருவரும் விலைமதிப்பு மிக்க பொருட்களை வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (36) மற்றும் அவரது மனைவி நிஷா (34). கல்லீரல் செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த ஜாகீர் உசேன், மாற்று கல்லீரல் சிகிச்சைக்காக கடந்த 13-ம் தேதி கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருடைய மனைவி நிஷா, தனது கணவருக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து, இன்று நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நிஷாவின் கல்லீரல், ஜாகீர் உசேனுக்கு மாற்றி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

இது தொடர்பாக பேசிய ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் பழனிவேலு கூறுகையில், "பிரான்சில் முதல்முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதைத் தொடந்து, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த சிகிச்சை பிரபலமானது. இந்த நிலையில், இந்தியாவில், முதல்முறையாகக் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது," என்றார்.
காதலர் தினத்தையொட்டி, ஒவ்வொருவரும் விலைமதிப்பு மிக்க பொருட்களை வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.